Posts

Showing posts from March, 2017

நீங்கள் அதிர்ஷடசாலி தான்

Image
இதை  சேமித்து வைத்து, அடிக்கடி படியுங்கள். இதைப் படிப்பதால், உங்கள் வாழ்க்கை முறை, கவலைகள், பழக்க வழக்கங்களில் மாற்றம் ஏற்படலாம். * உண்ண உணவும், உடுத்த உடையும், வசிக்க இடமும் உனக்கு இருந்தால்,  உலகில் உள்ள 75% மக்களை விட நீ வசதி பெற்றிருக்கிறாய். * உனக்கு வங்கியில் பணமிருந்தால், அவ்வாறு உள்ள 8% பணக்காரர்களுள், நீயும் ஒருவன். உலகில் உள்ள 80% மக்களுக்கு வங்கி கணக்கே இல்லை. * உன்னிடம் கணிப்பொறி இருந்தால் நீ அவ்வாறு வாய்ப்பு பெற்ற 1% மனிதர்களுள் ஒருவன். * நினைத்த நேரத்தில், நினைத்த நபருடன் மொபைலில் உன்னால் பேச முடிந்தால்.. அவ்வாறு வாய்ப்பே இல்லாமல் இந்த உலகில் இருக்கும் 175 கோடி மக்களை விட நீ மேலானவன். *நோயின்றி காலையில், புத்துணர்வுடன் நீ எழுந்தால், அந்த வாய்ப்பற்று இரவு படுக்கையிலையே, உயிர் துறந்த பலரை விட நீ பாக்கியசாலி. * பார்வையும், செவித் திறன், வாய் பேசாமை உள்ளிட்ட எந்த குறைபாடுகளும், இல்லாது நீ இருந்தால், அவ்வாறு உள்ள உலகில் உள்ள 20 கோடி மக்களை விட நீ நல்ல நிலையில் இருக்கிறாய். * போர், பட்டினி, சிறைத்தண்டனை போன்ற சித்ரவதையில் நீ சிக்காமல் இருந்தால், உல...

வெளிநாடு செல்ல தகுதிகள்

Image
மூனுவேளை மூக்குமுட்ட சாப்பிடுவதை நிறுத்தனும்; முதலாவதாய் முக்கால்வாசி சைவத்தை நீ மறக்கனும்! பெத்த தாயை திட்டாமல்-உன் துணியை நீயே துவைக்கனும்; உப்பு-காரம் தெரியாட்டியும் தினமும் நீயே சமைக்னும்! அப்பா வந்து எழுப்பாமல் அலாரம் வைத்து உறங்கனும்; அண்ணண் பாக்கெட்டில் எடுக்காமல் சிக்கனமாக இருக்கனும்! பேண்ட்-சட்டை இல்லைன்னாலும் பெர்முடாஸ்-டிசர்ட் உடுத்தனும்; பேங்க்-ல அக்கவுண்ட் இல்லைன்னாலும் ஃபேஸ்புக் அக்கவுண்ட் திறக்கனும்! அங்கே...... அரபியோட காருக்கு ஆயில் போட்டு துடைக்கனும்; அவனுடைய பிள்ளைக்கு சலாம் போட்டுத் தொலைக்கனும்! சாதி-மத சேட்டையெல்லாம் ட்ரங்க் பெட்டிக்குள் அடைக்கனும்; நாசாவிலே வேலையென்றாலும் ட்ரம்ப்-க்கு நீ அடங்கனும்! இந்தி தெரியாமல் போனாலும் இந்தியன் என்றே சொல்லனும்; தமிழன்-ற திமிர் இருந்தாலும் இங்கிலீஷ் கொஞ்சம் பேசனும்! நண்பர்கள் நிறைய கிடைச்சாலும் நாசூக்காகப் பழகனும்; நல்லவனென்று தெரிஞ்சாலும் கொடுக்கல்-வாங்கலை குறைக்கனும்! சொந்த-பந்தங்களை நினைக்காமல் பாச-நேசத்தை மறக்கனும்; தலைவலி காய்ச்சல் என்றாலும் தாய் தகப்பனிடம் மறைக்கனும்! வீடுகட்டி கல்யா...

காற்றைச் சுத்தப்படுத்தும் வீட்டுச் செடிகள்...!

Image
வீட்டுக்கு ஒரு செடியாவது வளர்ப்போம்... மரத்தையெல்லாம் அழிச்சாச்சு. இனி, நல்ல காத்துக்கு எங்கே போறது? இனிமே மரம் ந ட்டாலும் அது வளர்ந்து முழு மரமாகிறதுக்கு 20, 30 வருஷங்கள் ஆகுமே’ என்று சங்கடப்படுபவர்களே... உங்களுக் காகவே இந்த நல்ல செய்தி! வீட்டிலேயே வளர்க்கக் கூடிய சில குறுஞ்செடிகளில் காற்றில் உள்ள நச்சுக்களைச் சுத்தப்படுத்தும் குணம் நிரம்பி இருக்கிறது என்று நாசா விஞ்ஞானிகளின் ஆராய்ச்சி கூறுகிறது. தமிழ்நாட்டுச் சீதோஷ்ண நிலையில் வாழும் தன்மையையும், அதிக நன்மை களையும் கொடுக்கும் இந்தச் செடிகளைப் பற்றிய அறிமுகம் இதோ... கற்றாழை (AloeVera): மருத்துவக் குணங்கள் நிறைந்துள்ள கற்றாழை, காற்றில் உள்ள ஃபார்மால்டிஹைட் என்னும் வேதிப் பொருளை நீக்கும். சருமத் தீப்புண்களுக்கும் மருந்தாகப் பயன்படும்! சீமை ஆல் (Rubber plant): வெயில் படாத இடங்களில்கூட வாழும் தன்மைகொண்டவை. அதிகமாக அசுத்தக் காற்றை உள்ளிழுத்து அதிகப்படியான ஆக்சிஜனை வெளியிடும். வெள்ளால் (Weeping Fig): காற்றின் நச்சுக்களை நீக்கி சுற்றுப்புறத்தின் ஆக்சிஜன் அளவை அதிகப்படுத்தும். மூங்கில் பனை (Bamboo Palm) : காற்றில் கலந்துள்ள ...

அத்திப்பழம் பலன்கள்

Image
               அத்திப் பழங்கள் பழமாகவும், உலர் பழமாகவும் பயன்படுத்தப்படுகிறது. அத்திப் பழம் என நாம் பார்க்கக் கூடியது உண்மையான பழமல்ல. அது பூவேயாகும். அத ்திமரத்தில் விநோதமான பூவும் விதைகளும் சேர்ந்தே பழம் எனும் ஒரு தோற்றத்தை தருகின்றது. அத்திப் பழங்கள் 6-8 மீட்டர் உயரம் வரை வளரக்கூடிய மரங்களில் காய்க்கின்றன. பெரிய முட்டை வடிவிலான இலைகள் இருக்கும். அத்திப்பழம் இரு வகைப்படும். சீமை அத்தி எனவும், நாட்டு அத்தி எனவும் தாவரவியலில் திகழ்கின்றது. அதிசயமாக கிடைக்கும் அத்திப்பழம் பல்வேறு மருத்துவப் பண்புகளைக் கொண்டுள்ளது. சீசனில் மட்டுமே கிடைக்கும் இந்த பழத்தை உண்பதன் மூலம் உடல் சுறுசுறுப்படைகிறது. இதில் சீமை அத்திப்பழம், நாட்டு அத்திப்பழம் என இரண்டு வகை உண்டு. அத்திப்பழத்தில் இரத்தத்தை விருத்தி செய்யக்கூடியதும், இரத்தத்தை சுத்தப்படுத்தக்கூடியதுமான உயிர்ச் சத்துக்கள் அதிகம் காணப்படுகின்றன.அத்திப் பழங்களில் அதிக அளவு வளர்சிதை மாற்றத்தைத் தடுக்கக் கூடிய Antioxidants உள்ளன. பழத்தில் அடங்கியுள்ள சத்துக்கள்: அத்திப் பழங்களில் 84% பழக்கூடும் 16% தோலும...

மூல நோய் விரட்ட

Image
மூல நோய் விரட்ட # வெள்ளை வெங்காயம் ஒரு கைப்பிடி எடுத்து, பொடியா நறுக்கி, நெய் விட்டு வதக்கணும். ஓரளவு வதங்கினதும் ஒரு ஸ்பூன் பனங்கல்கண்டு, இல்லனா... பனைவெல்லம ் போட்டுக் கிளறணும். விழுதானதும் இறக்கி வச்சு, சூடு ஆறினதும் பாதியைச் சாப்பிடணும். மீதியை மறுநாள் காலையில சாப்பிடணும். தொடர்ந்து 5 தடவை இப்படி செஞ்சி சாப்பிடணும். (ஒரு தடவை செய்ததில் பாதியை முதல் நாளும், மீதியை மறுநாள் காலையும்). அதுக்கு மேல செஞ்சி வச்சா கெட்டுப்போயிரும். இந்த வெள்ளை வெங்காயம் சாப்பிட்டா மூலம், பவுத்திரம், ரத்தப்போக்கு எல்லாமே சரியாகிவிடும். மூல நோய் பாதித்தவர்கள் படும்பாடு சொல்லில் அடங்காதது. உயிர் போகும் வலியால் துடிதுடித்து போவார்கள். இதற்கு அறுவை சிகிச்சை தீர்வு என்றாலும், உணவுப்பழக்கம், உடற்பயிற்சி மூலமும் தீர்வு காணலாம் என்கிறார் மருத்துவர் சசிக்குமார். கண்டுகொள்ளாமல் விடப்படும் மூலம் கேன்சராக மாறலாம் என்றும் எச்சரிக்கிறார். அவர் கூறியதாவது: ஆசனவாய் பகுதியில் ரத்தக்குழாய் தடிமன் ஆவதுதான் மூலமாக உருவெடுக்கிறது. இதன் அறிகுறியாக முதலில் அரிப்பு ஏற்படும். இயற்கை உபாதை கழிக்கும் போது மிகவும் சிரமப்ப...

தூக்கம் எங்கே போனது?

Image
அசைந்தாடும் சோளக் கதிர்களின் ஆட்டம், அவ்வப்போதுக் களைப்பைப் போக்கப் பகல் முழுவதும் கடுமையாக உழைத்துவிட்டு, மதிய வெயிலில் புங்கை மரப் பூக்கள் உதிர்ந்து கிடக்கும் மலர் படுக்கையில் சிறிது நேரம் இளைப்பாறிவிட்டு, மாலையில் வீசும் தூய்மையான தென்றல் காற்றுடன் உறவாடிவிட்டு, இரவில் கோரைப் பாயில் மனிதன் நிம்மதியாகத் தூங்கிய காலம் ஒன்று இருந்தது! கட்டுப்பாடின்றி விரைந்துகொண் டிருக்கும் வாகனங்களின் இரைச்சல் காதைத் துளைக்க, பகல் முழுதும் மூளை உழைப்பைச் செலுத்திவிட்டு, மதிய நேரத்தில் சிறிது நேரம் இளைப்பாற, ‘புஷ்-பேக்' இருக்கையிலேயே சாய்ந்து விட்டு, உடலும் மனமும் புழுங்க மாலை வேளையிலே மாசுபட்ட காற்றுடன் உறவாடிவிட்டு, இரவில் மெதுமெதுவென்று இருக்கும் மெத்தையில் புரண்டு புரண்டு படுத்தாலும் தூக்கத்தை தேட வேண்டிய நிலையே இன்றைக்குப் பலருக்கும் வாய்த்திருக்கிறது. என்ன தீர்வு? நிம்மதியான தூக்கத்தைத் தொலைப் பதால் ஏற்படும் விபரீதங்களும், தூக்கத்தை மீட்பதற்கான வழிமுறை களும்தான் என்ன? கடுமையான மன அழுத்தம், நெருக்கடியான வாழ்க்கைச் சூழல், அடிக்கடி ஏற்படும் உடல் உபாதைகள், எண்ணிலடங்கா மருந்து-மாத்திரைகள...

மருந்துகடைகளில் விற்கப்படும் எந்த மூலிகைபொடி எதற்கு பயன்படும்..?

*மருந்துகடைகளில் விற்கப்படும் எந்த மூலிகைபொடி  எதற்கு பயன்படும்..?* *பாதுகாக்க படவேண்டிய பயனுள்ள குறிப்புகள்..!* *அருகம்புல் பொடி* அதிக உடல் எடை, கொழுப்பை குறைக்கும், சி...

அனைவரிடமும் அன்புடன் பழகுவோம்

Image
அனைவரிடமும் அன்புடன் பழகுவோம் அன்பை வெளிப்படுத்தும் எதையும் கொண்டு வாருங்கள் என்று நான்கு மாணவிகளை அனுப்பினார் ஆசிரியை. திரும்பி வந்த ஒரு மாணவியின் கைகளில் மலர் இருந்தது. இன்னொரு மாணவியிடம் வண்ணத்துப் பூச்சி இருந்தது. மற்றொரு மாணவியிடம் ஒரு குஞ்சுப்பறவை இருந்தது. முதலில் கிளம்பிப்போன மாணவியோ கடைசியில் வெறுங்கையோடு திரும்பி வந்தாள். ஏனென்று கேட்டபோது சொன்னாள்: “நானும் மலரைப் பார்த்தேன். அழகாய் இருந்தது. செடியிலேயே இருக்கட்டும் என்று விட்டுவிட்டேன். வண்ணத்துப் பூச்சியைப் பார்த்தேன். அழகாய் இருந்தது. சுதந்திரமாய்ப் பறக்கட்டும் என்று விட்டுவிட்டேன் குஞ்சுப் பறவையைப் பார்த்தேன். தாய்ப்பறவை தேடுமென்று விட்டுவிட்டேன்...” அந்த மாணவியை அணைத்துக் கொண்ட ஆசிரியை சொன்னார்: “அன்பு என்றால் இதுதான்!” ஒன்றுமே கொடுக்க வேண்டாம். எதையுமே பறிக்காமல் இருந்தால் அதுவே போதும்... எதையும், யாரையும் காயப்படுத்தாமல் இருப்போமே... நாம் உலகிற்கு எதையேனும் கொடுக்க வேண்டுமென நினைத்தால் அன்பைக் கொடுப்போம்... ஏனெனில் உலகில் எங்கும் பரவிக் கிடப்பது அன்பு ஒன்று தான்... ஆனால் உலகம் அதிகமாக ஏங்கிக் கிடப...

மஞ்சள் பால்... ஆரோக்கியத்தின் அதிசய ரகசியம்! #Turmericmilk

Image
மஞ்சள் பால்... ஆரோக்கியத்தின் அதிசய ரகசியம்! #Turmericmilk `வெறும் பாலைக் குடிக்காதே... அதுல ஒரு துளி மஞ்சள் பொடி கலந்து குடி’ என்பார்கள் நம் வீட்டுப் பாட்டிகள். ஜலதோஷம் பிடித்தால், தொண்டை வறண்டால், வறட்டு இருமல் வந்தால் மட்டுமே நாம் மஞ்சள் தூள் பால் அருந்துவோம். சச்சின் டெண்டுல்கர் தினமும் இரவில் உறங்கச் செல்வதற்கு முன்னர் மஞ்சள் தூள் கலந்த பாலைத்தான் குடிப்பாராம். உண்மையில், நமது முன்னோர்கள் சொல்லிச் சென்றதை சரியாகப் புரிந்துகொண்டு பின்பற்றாததுதான் இன்றைக்குப் பல நோய்களுக்குக் காரணம். அவற்றில் மஞ்சள் பால் ரகசியமும் ஒன்று. இது ஓர் ஆரோக்கிய அதிசயம். இதைக் குடிப்பதால் கிடைக்கும் மருத்துவப் பலன்கள் ஏராளம். அவை... தங்கமான பலன்கள்... * மஞ்சள் கலந்த பாலில் நோய் எதிர்ப்புச் சக்தி அதிகமாக இருப்பதால், தோல், சிறுகுடல், குடல் மற்றும் மார்பகப் புற்றுநோய் வராமல் நம்மைப் பாதுகாக்கும். புற்றுநோய் செல்களை தடுக்கும். கீமோதெரப்பியால் உண்டாகும் பக்க விளைவுகளையும் குறைக்கும். * இதில் வைரஸ் எதிர்ப்பு மற்றும் பாக்டீரியாக்களை எதிர்க்கும் தன்மை அதிகம் இருப்பதால் சளி, இருமல் தீரும்; தொண்டை கரகரப்பா...

பப்பாளி இலையின் நன்மைகள் - இயற்கை மருத்துவம் - 2

Image
அன்றாடம் நாம் சாப்பிடும் பழங்களில் இருக்கும் மருத்துவ நன்மைகளை விட அதன் இலை, பூ, பட்டை, வேர் இது போன்ற மற்ற பாகங்களிலும் அதிகமாக நிறைந்துள்ளது. அந்த வகையில், பப்பாளி இலை முக்கிய பங்கினை வகிக்கிறது. இந்த இலையில் ஃபைட்டோ நியூண்ட்ரியண்டுகள், என்சைம் போன்ற நிறமிகளும், கால்சியம், பொட்டாசியம், சோடியம், மெக்னீசியம் மற்றும் இரும்பு போன்ற கனிமச் சத்துக்களும் அதிகமாக உள்ளது. எனவே பப்பாளி இலையில் ஜூஸ் செய்துக் குடித்து வந்தால், ஏராளமான நன்மைகளை நாம் பெறலாம். நமது உடம்பில் ஓடும் ரத்தத்தில், இரத்தத் தட்டுகள் குறைந்தால், அது பல்வேறு நோய்களை ஏற்படுத்தும். இதனால் பப்பாளி இலை ஜூஸ் குடித்து வந்தால், ரத்த செல்களின் உற்பத்தியை அதிகரிக்கச் செய்யலாம். பப்பாளி இலையின் சாறு நமது உடம்பில் உள்ள கல்லீரலின் ஆரோக்கியத்தை மேம்படுத்தி, மஞ்சள் காமாலை, கல்லீரல் புற்றுநோய் போன்ற பிரச்சனைகள் ஏற்படாமல் தடுக்கிறது. நமது உடம்பில் உள்ள வைரஸ்கள் மற்றும் பாக்டீரியாக்களிடம் எதிர்த்து போராடி, மலேரியா, டெங்குக் காய்ச்சல், புற்றுநோய் போன்ற ஆபத்தான நோய்களிடம் இருந்து நம்மை பாதுகாக்கிறது. அன்றாடம் நாம் பப்பாளி இலை...

சிறுதானியத்தில் பெரும்பலன்கள்...

Image
ஆறுமாதக் குழந்தை முதல் அனைவருக்கும் ஏற்ற சத்தான உணவு சிறுதானியம். ஒவ்வொரு சிறு தானியத்துக்கும் தனித்துவச் சிறப்புகள் உள்ளன. எந்தெந்த சிறு தானியத்தில் என்னென்ன சிறப்புகள் என்பதைத் தெரிந்து கொண்டால் அவற்றைப் பயன் படுத்தி உடலை வலுப்படுத்திக்கொள்ள உதவியாக இருக்கும். கம்பு - ஆரோக்கியமான சருமத்தைத் தரும். பார்வைத்திறன் மேம்படும். உடல் வெப்பம் தணியும். வயிற்றுப் புண்களைக் குணப்படுத்தும். பாலூட்டும் தாய்மார்களுக்கு, பால் சுரக்க உதவும். தினை - இதயத்தைப் பலப்படுத்தும்.நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். ரத்தத்தில் உள்ள சர்க்கரை மற்றும் கொழுப்பின் அளவைக் கட்டுப்படுத்தும். மகிழ்ச்சியான மனநிலையைத் தரும். சாமை - ரத்தசோகையைக் குணப்படுத்தும். சர்க்கரை நோயாளிகளுக்கு உகந்தது. மலச்சிக்கல் தீரும். விந்தணுக்களின் எண்ணிக்கை அதிகரிக்க உதவும். உடலில் கொழுப்பு படிவதைத் தடுக்கும். சோளம் - உணவுக் குழாய் தொடர்பான நோய்கள் வருவது தடுக்கப்படும். ரத்த ஓட்டத்தைச் சீர்செய்யும். செரிமான சக்தி மேம்படும். வாயுத்தொல்லை நீங்கும். உடலுக்கு ஆற்றலைத் தரக்கூடியது. கேழ்வரகு - எலும்புகளை உறுதிசெய்யும். இரும்புச்...

தமிழ் மருத்துவம் -1

*தலைவலி தலைபாரம் நீங்க : நொச்சி இலையெய் கொதிக்க வைத்து இரண்டு செங்கற்களை அதில் போட்டு ஆவி பிடித்தால் தீரும் *வயிற்று கோளாறுக்கு நல்ல மருந்து : புதினா துவையல் *நேந்திரமூலி, அதிமதுரம் தூள் செய்து சாப்பிட்டு வந்தால் கண்கள்  ஒளி பெரும். *வயிற்று போக்கு குணமாக மாதுளம் பழத்தை வேக வைத்து சாறு எடுத்து தேனுடன் கலந்து உண்ண குணமாகும் *மாங்கொட்டை பருப்பை கைய வைத்து பொடியாக்கி ஒரு சிட்டிகை தேனில் குழைத்து 2 வேளை கொடுக்க குடல் பூச்சி அகலும் *அதிமதுரத்தை ஒரு சிறு துண்டை வாயில் போட்டுகொண்டால் நெஞ்சுகமறல் நீங்கும் *வயிற்று பூச்சி ஒழிய பாகற்காயின் விதையை அரைத்து பாலுடன் கலந்து அருந்தி வர சுத்தமாகும் *எலுமிச்சை சாறு தேன் கலந்து உண்டால் இருமல் படி படியாக குறையும் *மூச்சு வாங்கும் பிர்ச்சனை  தீர தூதுவளை சிறந்த பரிகாரம் *மாதுளம் பழசாறு எலுமிச்சை பழசாறு கலந்து குடித்து வந்தால் சளி தொல்லை தீரும் *வெல்வேளை செடிகளை பறித்து நசுக்கி சாறு எடுத்து காலை மாலை 5 சொட்டு வீதம் காதில் விட்டு வர காது வலி குணமாகும் *முடக்கத்தான் இலை சாற்றை சீரக பொடியோடு போட்டு ஊற வைத்து சில துளிகள் காதில் வி...